வெள்ள நிவாரணம் வழங்கல் - மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
விளவங்கோடு பகுதியில் வெள்ள நிவாரணம் வழங்கல் - மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு;
By : King 24x7 Website
Update: 2023-12-31 04:02 GMT
விளவங்கோடு பகுதியில் வெள்ள நிவாரணம் வழங்கல் - மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வருவாய் வட்டத்திற்குட்பட்ட சாங்கை, மேல்புறம், அண்டுகோடு ஆகிய பகுதிகளிலுள்ள நியாவிலைக்கடைகளில் வெள்ள நிவாரண தொகை வழங்கப்படுவதை கைத்தறி, கைவினைப்பொருட்கள், ஜவுளி மற்றும் காதித்துறை அரசு முதன்மை செயலாளரும், கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தர்மேந்திரா பிரதாப் யாதவ், மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். நடைபெற்ற ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் த.ஜெ.பாலசுப்பிரமணியம், உதவி ஆட்சியர் (பயிற்சி) ரஜத் பீட்டன், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.