பண்பொழி அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

செங்கோட்டை அருகே பண்பொழி இ.ம.அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் 200 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

Update: 2024-02-09 02:03 GMT
விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழியில் செயல்படும் இ.ம.அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் செல்லப்பாண்டியன் முன்னிலையில் நடந்த விழாவிற்கு தலைமை வகித்த பண்பொழி பேரூராட்சி தலைவரும், திமுக பேரூர் செயலாளருமான ராஜராஜன், மாணவ- மாணவிகள் 200 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மேலாண் குழு தலைவி பர்வீன் பானு, பெற்றோர்- ஆசிரியர் கழகப் பிரதிநிதி கருப்பையா, சமூக ஆர்வலர்கள் மருதையா, ஆசிரியர்கள்- அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News