தென்காசியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

தென்காசியில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 8 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

Update: 2023-12-28 09:20 GMT

நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

தென்காசியில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் ரூ. 8 லட்சத்து 67ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் துரை. ரவிச்சந்திரன் வழங்கினாா்.

ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவுக்கு, ஆட்சியா் தலைமை வகித்து விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பாக பணிபுரிந்த சிறப்பாசிரியா்கள், தசைப் பயிற்சியாளா்களுக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கினாா்.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 8 பேருக்கு மின்கலம் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள், 5 பேருக்கு மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் என மொத்தம் ரூ. 8,67,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜெயபிரகாஷ், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags:    

Similar News