சாக்கடையாக மாறும் குளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

முக்கண்ணாமலைப்பட்டியில் சாக்கடையாக மாறும் குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-05-20 13:44 GMT
முக்கண்ணாமலைப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி அருகே வேளாண் குளம் உள்ளது.இந்தக் குளம் தற்போது புதர் மண்டி பாசி படர்ந்து சாக்கடையாக கிடக்கிறது. இதனால் குளத்து நீர் மாசடைந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News