பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்து விழிப்புணா்வு

திண்டுக்கல் மாநகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2024-01-20 12:55 GMT

சுகாதார விழிப்புணர்வு

திண்டுக்கல் மாநகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்து வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.மாநகராட்சிக்குள்பட்ட 1, 22, 13 உள்பட மொத்தம் 10 வாா்டுகளில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்வுகளுக்கு ஆணையா் ந. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். அப்போது குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல், குப்பைகளை சாலையில் வீசுவதை தவிா்த்தல், கழிவுநீா் கால்வாய்களை குறிப்பிட்ட இடைவெளியில் தூய்மைப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
Tags:    

Similar News