கனரக வாகனங்களை பொதுமக்கள் சிறைப்பிடிப்பு

தென்காசி மாவட்டத்தில் கனரக வாகனம் ஒன்று மின்வயரை அறுத்து சென்றதால் பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

Update: 2024-03-08 11:49 GMT


தென்காசி மாவட்டத்தில் கனரக வாகனம் ஒன்று மின்வயரை அறுத்து சென்றதால் பொதுமக்கள் சிறை பிடித்தனர்.



தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வடமலைப்பட்டியில் கனிமவளங்களை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களால் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறிவரும் நிலையில் நேற்று இரவு ஒரு வீட்டிற்கு செல்லும் மின்வயரை கனரக லாரி அறுத்து விட்டது. இதனால் கிராம மக்கள் அதன் பின்னர் வந்த கனரக வாகனங்களை சிறை பிடித்து வைத்துள்ளனர். தகவல் இருந்த போலீசார் விரைந்து சென்று இதுகுறித்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். போலீசார் பேச்சுவார்த்தை பின்பு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News