மக்கள் தொடர்பு திட்ட முகாம்

குக்கல்மலை கிராமத்தில் இன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.

Update: 2023-12-21 12:29 GMT

குக்கல்மலை கிராமத்தில் இன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.

தர்மபுரி மாவட்டம், 21/12/2023. தர்மபுரி வட்டம், கிருஷ்ணாபுரம் உள்வட்டம், திப்பிரெட்டிஅள்ளி தரப்பு, குக்கல்மலை கிராமத்தில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தஆ.கோவிந்தசாமி, தருமபுரி கோட்டாட்சியர் டி.ஆர்.கீதாராணி, மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் யசோதா மதிவாணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பூங்கொடி சேகர், தர்மபுரி வட்டாட்சியர் ஜெயசெல்வன், ஒன்றியக்குழு உறுப்பினர் லட்சுமி ராஜேந்திரன், திப்பிரெட்டிஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா சுப்பிரமணி, உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை மாவட்ட அளவிலான முதல் நிலை அலுவலர்கள் உள்ளனர்.
Tags:    

Similar News