பொதுமக்கள் சாலை மறியல்

உசிலம்பட்டி அண்ணாநகரில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் கால தாமதம் செய்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-05-13 15:30 GMT

உசிலம்பட்டி அண்ணாநகரில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் கால தாமதம் செய்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 22 வது வார்டு அண்ணா நகர் தெருவில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு தேண்டப்பட்டு 8 மாதங்களாக சிமெண்ட் சாலை போடாமல் இருந்து வந்ததாகவும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஜல்லி கற்கள் கலவை மட்டும் போடப்பட்டதாகவும் இதில் குழிகள் தோண்டப்பட்டு பொதுமக்கள் சென்று வருவதற்கும், வாகனங்கள் செல்வதற்கும் சிறமத்திற்குள்ளாவதாகவும் கூறி உசிலம்பட்டி - பேரையூர் செல்லும் சாலையில் முட்களை வெட்டி போட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்., தகவலறிந்து வரைந்து வந்த நகர் காவல் துறையினர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது., இந்த சாலைமறியலால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்ககப்பட்டது.,
Tags:    

Similar News