தேர் திருவிழாவில் கலந்து கொள்ள புதுச்சேரி முதல்-அமைச்சருக்கு அழைப்பு!

சித்திரை தேர் திருவிழாவில் கலந்து கொள்ள புதுச்சேரி முதல்-அமைச்சருக்கு பூரண கும்ப மரியாதையுடன் அழைப்பு விடுக்கப்பட்டது ‌.

Update: 2024-03-25 11:36 GMT

சித்திரை தேர் திருவிழாவில் கலந்து கொள்ள புதுச்சேரி முதல்-அமைச்சருக்கு பூரண கும்ப மரியாதையுடன் அழைப்பு விடுக்கப்பட்டது ‌.


வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே காங்குப்பம் மகாதேவ மலையில் மகானந்த சித்தர் தலைமையில் சித்திரை தேர் திருவிழா வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி மகாதேவமலை மகானந்த சித்தர் அருளாசியுடன் செய்யாறு கல்யாண முருகர் கோவில் ஸ்தாபகரும், மகா தேவமலை அறங்காவலர் குழு உறுப்பினரும், செய்யாறு நகர பா.ஜனதா தலைவருமான கே.வி.ஆர். என்ற கே.வி.வெங்கட்ராமன் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து தேர் திருவிழாவில் பங்கு பெறுமாறு பூரண கும்ப மரியாதையுடன் அழைப்பு விடுத்தார்.
Tags:    

Similar News