புதுக்கோட்டையில் ஒரே நாளில் 51 பேருக்கு டெங்கு..! அச்சத்தில் மக்கள்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேகமாகப் பரவும் காய்ச்சலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2023-10-20 12:48 GMT

புதுக்கோட்டையில் வேகமாகப் பரவும் டெங்கு காய்ச்சல்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழகத்தில் தற்பொழுது டெங்கு காய்ச்சலால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக டெங்கு காய்ச்சலால் ஒரே நாளில் 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 162 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை டெங்கு காய்ச்சலால் 85 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாள்தோறும் ஒன்று அல்லது இரண்டு பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 51 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தின் கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக அளவில் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகிவருவது குறிப்பிடத்தக்கது.  
Tags:    

Similar News