இரவு உணவு வழங்கிய புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி
பேட்டை நரிக்குறவர் காலனியில் உள்ள முதியவர்களுக்கு புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் நெல்சன் இரவு உணவு வழங்கினார்.;
Update: 2024-04-02 02:22 GMT
உணவு வழங்கல்
நெல்லை மாநகர பேட்டையில் உள்ள நரிக்குறவர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த நரிக்குறவர் முதியவர்களுக்கு நேற்று இரவு திருநெல்வேலி மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் நெல்சன் ஏற்பாட்டில் இரவு உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் செய்திருந்தனர்.