விவசாய நிலத்தில் மலைப்பாம்பு - பதறிய விவசாயிகள்!

விவசாய நிலத்தில் நெல் அறுவடைையின் போது ஊர்ந்து சென்ற மலைப் பாம்பை பார்த்து விவசாயிகள் பதறியடித்து ஓடினர்.

Update: 2024-06-25 01:33 GMT
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள ஓட்டேரி பாளையம், தாமரைகுட்டை பகுதியே சேர்ந்தவர் பிச்சாண்டி.இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் நெல் பயிரிடப்பட்டு அறுவடை செய்து வந்தார். அப்போது நெற்பயிர்களுக்கு இடையே மலைப்பாம்பு சுருண்ட நிலையில் இருந்ததை பார்த்து வேலை ஆட்கள் பாம்பு, பாம்பு என அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பின்பு அங்கு சென்று பார்க்கும் போது மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலறிந்து விரைந்து வந்த வனவர்கள் தயாளன் மற்றும் பழனி ஆகியோர் சுமார் 7 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்து அருகே உள்ள காப்பு காட்டிற்குள் விட்டனர்.
Tags:    

Similar News