வயலில் சுற்றிய மலைப்பாம்பு - வனத்துறையினர் மீட்பு!

நெற்பயிர் இடையில் சுற்றிய மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு, வனபகுதிக்கு கொண்டு சென்றனர்.

Update: 2024-04-08 07:12 GMT
 மலைப்பாம்பு
குமரி மாவட்டம், தோவாளை பகுதி  பண்டாரபுரம் அருகே நாகமுத்து என்பவரின் வயல் உள்ளது. இவர் அந்த வயலில் நெல் பயிரிட்டிருந்தார். இன்று நெற்கதிர்களை  அறுக்கும் போது, நெற்பயிர் இடையில் மலைப்பாம்பு ஒன்று  செல்வதை கண்டார். இது குறித்து நாகமுத்து உடனடியாக நாகர்கோவில் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு, வனபகுதிக்கு கொண்டு சென்றனர்.
Tags:    

Similar News