ராகுல்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு பாலபிஷேகம்

ராகுல்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளிக்குடத்தில் அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் பாலபிஷேகம் செய்தனர்.

Update: 2024-06-20 01:18 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நகர வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும்,எம்.பியுமான இராகுல்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இன்று சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் 10அடி உயரத்திற்கு ராகுல் காந்தியின் உருவப்படம் வைக்கப்பட்டு காங்கிரஸ் கட்சி மேற்கு மாவட்ட பொதுசெயலாளர் ஜோதி நிவாஸ்,நகர தலைவர் டி.எஸ்.அய்யப்பன் தலைமையில் வெள்ளி குடத்தில் பால்,பன்னீர் அபிஷேகம் செய்து ராகுல் காந்தி பிறந்த நாளை கொண்டாடினார்கள். இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகளையும் வழங்கினார்கள்.
Tags:    

Similar News