மதுராந்தகம் சார் பதிவாளர் அலுவலகம் வளாகத்தில் மழை நீர் தேக்கம்

மதுராந்தகம் சார் பதிவாளர் அலுவலகம் வளாகத்தில் மழை நீர் தேங்கியது.

Update: 2024-01-09 08:10 GMT
சார் பதிவாளர் அலுவலகம் வளாகத்தில் மழை நீர் தேக்கம்

செங்கல்பட்டு மாவட்டம்,அச்சரப்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகம் வளாகம் முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளதால் மோட்டாரை வைத்து நீரை வெளியேற்றும் அவல நிலை. செங்கல்பட்டு மாவட்டம்,அச்சரப்பாக்கம் நகரில் சார் பதிவாளர் அலுவலகம் பஜார் வீதியில் இயங்கி வருகிறது

.இந்த அலுவலகம் 80 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் இயங்கி வருகிறது.இந்த கட்டிடத்தை சுற்றிலும் நேற்று மாலை முதல் தொடர்ந்து பெய்த 16 மணி நேர கனமழையால் அலுவலக வளாகம் சுற்றிலும் மழை நீர் தேங்கியது. இந்த மழை நீரை வெளியேற்ற தற்காலிகமாக மோட்டார் வைத்து நீரை வெளியேற்றும் பணி நடைபெறுகிறது. இந்த கட்டடத்தில் மிகவும் பழுதடைந்து

காணப்படுகிறது.நடந்து வரும் மழைநீர் வரத்தாலும் தொடர்ந்து மழை பெய்தாலும் அலுவலகத்திற்குள் மழை நீர் மிகவும் அபாய நிலை உள்ளது. இதனால் அங்குள்ள ஆவணங்கள் அனைத்தும் நீரில் மூழ்கும் அவல நிலை உள்ளது.

Tags:    

Similar News