இரண்டாவது நாளாக மக்களை குளிர்வித்த மழை

சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பெய்த மழை பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2024-06-20 01:02 GMT

மழை

சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி சுற்று வட்டார பகுதிகளான செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, ஒடச்சக்கரை, வட்ராம்பாளையம், காவேரிப்பட்டி, மோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென மாலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ந்த காற்று வீசிய பின்னர். இடி மின்னலுடன் தொடர்ந்து இரண்டாவது நாளாக பெய்த மழையால சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது இதனால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்..
Tags:    

Similar News