ஆர்.எஸ்.மங்கலம் அருகே குடியிருப்பை சூழ்ந்த மழைநீர்

Update: 2023-11-10 01:55 GMT
அகற்றப்படாத  மழைநீர்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா பாரனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கைலாசசமுத்திரம் காலனி உள்ளது.இங்கு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாசித்து வருகின்றனர்.அண்மையில் பெய்த மழையால் காலனியில் தண்ணீர் வடியாமல் தெருக்களிலும், வீடுகளைச் சுற்றிலும் தண்ணி சூழ்ந்துள்ளதால் சிறுவர் முதல் பெரியவர் வரை வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமலும் கொசு தொல்லையாலும் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறும் தண்ணீரை வெளியேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக செயல்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது இப்பள்ளியின் உள்வளாகத்திலும்,சுற்றுச் சுவர் வெளியிலும் தண்ணீர் குளம் தேங்கி நிற்கிறது இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே இப்பகுதி மக்கள்நலன் கருதி மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தண்ணீரை வெறியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News