வளர்ந்த பாரதம் விழிப்புணர்வு ஊர்வலம்

குடுமியான் மலை அரசு வேளாண்மை கல்லூரியில் வளர்ந்த பாரதம் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-12-24 11:39 GMT

வளர்ந்த பாரதம் விழிப்புணர்வு ஊர்வலம்

குடுமியான்மலை அரசு வேளாண்மை கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்தில் சார்பில் வளர்ந்த பாரதம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு கல்லூரி முதல்வர் நக்கீரன் தலைமை தாங்கினார், முனைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலம் அரசு வேளாண்மை கல்லூரியில் தொடங்கி குடுமியான் மலை வரை சென்று மீண்டும் கல்லூரிக்கு வந்தடைந்தது. இதில் கலந்துகொண்ட மாணவர்கள் வளர்ந்த பாரதம் பற்றி முழக்கமிட்டு மாணவர்கள் இளைஞர்களின் எழுச்சி இறுதியாண்டின் வளர்ச்சி நமது வரலாற்றின் இனி ஒரு பொழுதும் நமது சுதந்திரத்தை இழக்காத வகையில் அசைக்க முடியாத அடித்தளத்துடன் கூடிய நமது தேச பாதுகாப்பை தட்டி எழுப்ப வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Tags:    

Similar News