இராசிபுரம் நகர மன்ற உறுப்பினர் வாக்கு பதிவு
இராசிபுரம் நகர மன்ற உறுப்பினர் வாக்களித்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-19 15:02 GMT
நகர்மன்ற தலைவர் வாக்களிப்பு
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் காலை முதல் விறுவிறுப்பாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில் ராசிபுரம் நகர மன்ற 14வது வார்டு உறுப்பினர் விநாயகமூர்த்தி தனது மனைவி நித்யா மற்றும் குடும்பத்தினருடன் வந்து பாசி செட்டி தெரு பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். இதே போல் பொதுமக்கள் அனைவரும் வரிசையில் நின்று அமைதியான முறையில் வாக்கு செலுத்தினர்.