ராஜீவ்காந்தி நினைவுநாள்!

ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு மலர் செடி நாற்றுகளை காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.

Update: 2024-05-21 12:23 GMT

ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு மலர் செடி நாற்றுகளை காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33-வது நினைவு நாள், நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சர்பில் ஊட்டி காபி ஹவுஸ் சந்திப்பில் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ராஜீவ்காந்தி உருவப் படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர்தூவி புகழ் அஞ்சலி செலுத்தினர். இதற்கு ஊட்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ., கணேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி வாசிக்க காங்கிரஸ் நிர்வாகிகள் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்று கொண்டனர். மாவட்ட விவசாய பிரிவு தலைவர் அபிமன்யு பொதுமக்களுக்கு மலர் செடி நாற்றுகளை விநியோகம் செய்தார்.
Tags:    

Similar News