ராஜீவ் காந்தி நினைவு நாள் - காங்கிரஸ் கட்சியினர் மலர்கள் தூவி மரியாதை

ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் அவரது திருவுருவ படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Update: 2024-05-21 08:23 GMT
முன்னாள் பாரத பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின்  33 வது நினைவு நாளை முன்னிட்டு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில், கரூர் லைட் ஹவுஸ் கார்னரில், ராஜீவ்காந்தி திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் கரூர் நகர தலைவர் சுப்பன் தலைமை தாங்கினார். கிருஷ்ணராயபுரம் வட்டார தலைவர் கோவகுளம் ராஜேந்திரன், ஓ பி சி மாநில துணை பொது செயலாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர்கள் சின்னையன், நாகேஷ் மற்றும் பரமத்தி வட்டார தலைவர் விசுவை செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மறைந்த தலைவர் ராஜீவ் காந்தி புகழ் ஓங்குக என கோசமிட்டு மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.
Tags:    

Similar News