காங்கேயத்தில் ராஜிவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

காங்கேயத்தில் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2024-05-22 08:37 GMT

திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபிநாத்  பழனியப்பன் வழிகாட்டுதலின்படி மறைந்த முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தியின்  33வது நினைவு  தினம்  கட்சி நிர்வாகிகளுடன் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி உறுதி மொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்த தலைவர் பண்டு பாய் என்கிற ஷேக் உபைதுல்லா தலைமை தாங்கினார். நகர தலைவர் சிபகத்துல்லா முன்னிலை வகித்தார்.மேலும் இந்நிகழ்வில் முன்னாள் நகர உறுப்பினர்கள் ஆறுமுகம், ராஜேஷ், வட்டார தலைவர் பரமேஷ், மாணிக்கவாசகம்,  மாநிலச் செயலாளர் மணி,  பழனிசாமி, வடிவேல், உமர், சஞ்சித், ஜாகிர்,பாபு, ஜபருல்லா, இளைஞர் காங்கிரஸ் அசதுல்லா, இம்ரான், நிஹமதுல்லா, பைஜ், கவுஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News