புதுகையில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவுநாளையொட்டி அவரது திருவுருவ படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2024-05-22 05:04 GMT

ராஜீவ் காந்தி நினைவு நாள்

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி. முருகேசன் தலைமையில். முன்னாள் நகர்மன்றத் தலைவர் துரை திவியநாதன்,மாநிலப் பொதுச் செயலர் பெனட் அந்தோனிராஜ், பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சந்திரசேகரன், மாநில சிறுபான்மையினர் பிரிவு துணைத் தலைவர் இப்ராஹிம் பாபு, வட்டாரத் தலைவர் சூர்யா பழனியப்பன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதேபோல, வட்டார காங்கிரஸ் சார்பில் திருச்சி சாலை பாலன்நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டாரக் காங்கிரஸ் தலை சூர்யா பழனியப்பன்தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் பெனட் அந்தோனிராஜ், மாவட்டத் தலைவர் வி. முருகேசன், செம்பாட்டூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செம்பை மணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியேற்றனர்.

Tags:    

Similar News