ராஜீவ் காந்தி நினைவு தினம் - சேலம் காங்கிரசார் அஞ்சலி

ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரசார் மெளன ஊர்வலமாக வந்து ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2024-05-22 07:12 GMT

ராஜீவ் காந்தி நினைவு தினம் 

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. அதன்படி சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பாஸ்கர் தலைமையில் நிர்வாகிகள் பலர் ஊர்வலமாக சென்று அந்த பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, பொருளாளர் தாரை ராஜகணபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பழனிசாமி, பிரபு, விவசாய பிரிவு சிவக்குமார் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News