ராஜீவ் நினைவு நாள் - காங்கிரசார் மவுன அஞ்சலி ஊர்வலம்

கள்ளக்குறிச்சியில் முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினத்தையொட்டி அவரது உருவ படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2024-05-22 05:00 GMT

ராஜீவ் காந்தி நினைவு நாள்

கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் காங்., சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ் 33ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மவுன அஞ்சலி ஊர்வலம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கி, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். நகராட்சி கவுன்சிலர் தேவராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் வீரமுத்து, துரைராஜ், இளையபெருமாள், மாவட்ட துணைத் தலைவர் இதயதுல்லா முன்னிலை வகித்தனர். நகர தலைவர் குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட தலைவர் தனபால், மாவட்ட பொறுப்பாளர் ஜெயச்சந்திரன் பங்கேற்றனர். மந்தைவெளியில் இருந்து காந்திரோடு வழியாக நான்குமுனை சந்திப்பு வரை காங்., கட்சியினர் ஊர்வலமாக சென்றனர். அங்கு ராஜிவ் உருவ படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தி, பயங்கரவாத எதிர்ப்பு உறுதி ஏற்றனர்.
Tags:    

Similar News