திருக்கடையூரில் ரேக்ளா ரேஸ்

மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் காணும் பொங்கல் முன்னிட்டு நடக்கும் மாடு மற்றும் குதிரைகள் பங்கேற்கும் ரேக்ளா ரேஸை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

Update: 2024-01-17 08:31 GMT

ரேக்ளா ரேஸ் துவக்கம் 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் காணும் பொங்கல் முன்னிட்டு மாடு மற்றும் குதிரைகள் பங்கேற்கும் ரேக்ளா ரேஸ் துவங்கியது, மாலை ஐந்து மணி வரை இந்த போட்டி நடைபெறும் இப்போட்டியை மயிலாடுதுறை மாவட்டக் கழக செயலாளர் நிவேதா முருகன் துவக்கி வைத்தார். திருக்கடையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செம்பு மத்திய ஒன்றிய கழக செயலாளர் நமது விஜயகுமார் மற்றும் நந்தினிஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் குவிந்திருக்கின்றனர். இப்போட்டியானது திருக்கடையூரில் துவங்கி தரங்கம்பாடி வரை சென்று திரும்பும்.
Tags:    

Similar News