ராமர்கோயில் கும்பாபிஷேகம்: இந்து முன்னணி சாா்பில் அழைப்பிதழ்கள்

அயோத்திகோயில் கும்பாபிஷேகத்துக்காக அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டது.

Update: 2024-01-02 15:05 GMT

அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டது


அயோத்தி ராமா் கோயிலில் இம்மாதம் 22ஆம் தேதி நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் பொதுமக்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட துணைத் தலைவா் இசக்கிமுத்து தலைமையில் சுவாமி சந்நிதி பஜாா், வீடுகளில் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன.

22ஆம் தேதி நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்குமாறும், அன்றைய தினம் மாலை 6 மணிக்கு வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி வழிபடவும் அழைப்பு விடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில், தென்காசி நகரத் தலைவா் நாராயணன், பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

Tags:    

Similar News