ராமச்சந்திர பெருமாள் கோவில் தேரோட்டம்!

சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் ராமச்சந்திர பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் 7ம் நாள் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

Update: 2024-04-23 02:50 GMT

சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் ராமச்சந்திர பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் 7ம் நாள் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் உள்ள சீதா தேவி, லட்சுமணன் சமேத ராமச்சந்திர பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாள் தேரோட்டம் நடைபெற்றது. தேரில் வாழை மரம், இளநீர், மாங்காய், ஈச்சங்காய், பனங்காய் ஆகியவை கட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ராமச்சந்திர பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேரில் வைத்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News