ராமநாதபுரம் தேசியப் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை

கீழக்கரையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Update: 2024-03-05 05:47 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பருத்திக்காரதெரு மற்றும் பட்டாணியப்பா தர்கா செல்லும் வழியில் உள்ள புது கிழக்கு ஆகிய பகுதிகளில் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இதில் பருத்திக்கார் தெருவை சேர்ந்த சம்சுதீன் மகன் தமிமுல் ஆசிக் மற்றும் புதுக் கிழக்கு தெருவை சேர்ந்த ஆல் முகீத் ஆகிய இருவரையும் அதிகாலை விசாரணைக்காக தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் வீட்டில் இல்லை அதைத் தொடர்ந்து வீட்டில் இருந்த அவருடைய சகோதரர் ஃபாகிம் என்பவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் ஃபாகிம் என்பவர் வீட்டில் இருந்து ஆறு சிம்கார்டுகள் பென்டிரைவ் லேப்டாப் மெமரி கார்டு ஆகியவை கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தனர். மேலும் இந்த விசாரணை எதற்காக என்பது பற்றி அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
Tags:    

Similar News