மேட்டூரில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோலப்போட்டி

சேலம் மாவட்டம், மேட்டூரில் மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோலப்போட்டி நடைபெற்றது.

Update: 2024-03-11 05:36 GMT

கோலப்போட்டி 

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு கோலப்போட்டி நடைபெற்றது. இதில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா இரட்டை இலை போன்ற வண்ணக் கோலங்களை பெண்கள் வரைந்தனர். போட்டியில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கே.வெங்கடாசலம் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில்  தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வம், வடக்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கவேல், பேரூர் கழக செயலாளர் சிவகுமார், மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News