அரிய வகை ஆஸ்திரேலிய பறவை மீட்பு

திருவெண்ணெய்நல்லுாரில் மங்களாம்பிகை சமதே கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ஆஸ்திரேலியா ஆந்தை மீட்கப்பட்டது.

Update: 2024-03-24 08:46 GMT

மீட்கப்பட்ட ஆந்தையுடன் தீயணைப்பு வீரர் 

 விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் உள்ள கோபுரத்தின் மேல் அறிய வகை ஆஸ்திரேலியா ஆந்தை இருப்பதாக அங்கிருந்தவர்கள் திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமையிலான வீரர்கள் கோவிலுக்கு சென்று கோபுரத்தின் மேல் உள்ள ஆஸ்திரேலியா ஆந்தையை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News