மரத்தில் தொங்கிய ஆண் சடலம் மீட்பு : போலீசார் விசாரணை

கோவில்பட்டி அருகே மரத்தில் தொங்கிய ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Update: 2024-02-01 06:11 GMT

ஆண் சடலம் மீட்பு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள குமாரபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள வேப்ப மரத்தில் ஆண் சடலம் தொங்கிய நிலையில் இருப்பதாக நாலாட்டின்புதூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. சடலத்தை போலீசார் மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். அவா், அதே பகுதி காலனி வடக்குத் தெருவை சோ்ந்த பெருமாள் மகன் கூலித்தொழிலாளி மாரிசாமி (45) என்பதும், மது அருந்தும் பழக்கம் உடைய அவருக்கு கடந்த சில நாள்களாக வயிற்று வலி இருந்து வந்ததும், இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவா் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Tags:    

Similar News