அக்னி வீரர்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம்

அக்னி வீரர்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-06-26 15:33 GMT

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்திய விமானப்படையில் சேர முன்பதிவு செய்யப்பட்ட ஆண் மற்றும் பெண் அக்னி வீரர்களுக்கான (இசை கலைஞர்) ஆள்சேர்ப்பு முகாம் அடுத்த மாதம் (ஜூலை) 3-ந் தேதி முதல் 12-ந் வரை பெங்களூருவில் நடைபெற உள்ளது. முன்பதிவு செய்த ஆண் மற்றும் பெண் அக்னி வீரர் (இசை கலைஞர்கள்) தவறாமல் முகாமில் கலந்து கொள்ளும்படி கலெக்டர் வளர்மதி கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News