இரவில் செம்மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம்,புதுக்கடை பகுதியில் செம்மண் கடத்தியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Update: 2024-01-29 08:32 GMT
பறிமுதல் செய்த வாகனங்கள்

குமரி மாவட்டம், புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அனுமதியின்றி வாகனங்களில் செம்மண் கடத்துவதாக புகார் உள்ளது. இந்த நிலையில் புதுக்கடை அருகே பிலாங்காலை என்ற பகுதியில் அனுமதியின்றி இரவில் செம்மண் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் சென்ற போது, ஜெசிபி இயந்திரம் மூலம் 2 டெம்போவில் மண் ஏற்றுவது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசை கண்டதும் சம்மந்தபட்ட வாகன டிரைவர்கள் வாகனங்களை விட்டு தப்பியோடினர். போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News