கொடுமுடியாறு அணையில் நீர் திறப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

நாங்குநேரி, கொடுமுடியாறு அணையில் வரும் 1 தேதி முதல் அக்டோபர் 28ஆம் தேதி வரை பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-06-29 04:03 GMT

நாங்குநேரி, கொடுமுடியாறு அணையில் வரும் 1 தேதி முதல் அக்டோபர் 28ஆம் தேதி வரை பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா கொடுமுடியாறு அணையில் இருந்து வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் அக்டோபர் 28ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 50 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் 5780 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி வரும் என கருதப்படுகின்றது. இதன் காரணமாக விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News