ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2024-05-03 12:11 GMT

சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.


ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட கன்னியாகுமரி சாலை பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறாக வியாபாரிகள் வைத்திருந்த விளம்பர பதாகைகளை கடலாடி வட்டாட்சியர் ரெங்கராஜ் தலைமையிலும், சாயல்குடி பேரூராட்சி இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. மேலும் சாயல்குடி பேருந்து நிலையம் அருப்புக்கோட்டை சாலை ராமேஸ்வரம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் சங்கத்தினர் அவகாசம் கேட்டதால் மீதமுள்ள ஆக்கிரமிப்பு பகுதிகள் வரும் புதன்கிழமை அகற்றப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News