ஆக்கிரமித்து வைக்கப்பட்ட ஷெட் அகற்றம்!

வேலூர் புதிய பேருந்து நிலையத்தின் மேல்புறம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு ஷெட் அகற்றப்பட்டுள்ளது.

Update: 2024-05-21 14:59 GMT

ஆக்கிரமிப்பு அகற்றம்

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சென்னை, ஓசூர், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கடையில் ஓட்டல் நடத்தி வருபவர் மாநகராட்சியில் அனுமதி பெறாமல் பஸ் நிலையத்தில் மொட்டை மாடியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி வைப்பதற்காக தகரத்தால் ஷெட் அமைத்துள்ளார். இதுகுறித்து ஆய்வு செய்த மாநகராட்சி கமிஷனர் ஜானகி அதை அகற்ற உத்தரவிட்டார்.

ஆனாலும் அந்த ஷெட் அகற்றப்படாததால் சுகாதார அலுவலர் பாலமுருகன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் அங்கு சென்று அந்த ஆக்கிரமிப்பு ஷெட்டை அகற்றினர்.

Tags:    

Similar News