கருங்கல் அருகே குளத்தை ஆக்ரமித்து கட்டிய சுற்றுச்சுவர் அகற்றம்

கருங்கல் அருகே குளத்தை ஆக்ரமித்து கட்டிய சுற்றுச்சுவர் அகற்றப்பட்டது.

Update: 2023-11-28 13:54 GMT
ஆக்கிரமிப்பு அகற்றம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை ஊராட்சிக்கு உட்பட்ட செட்டிக்குளத்தின் கரையை ஆக்ரமித்து வீடு மற்றும் சுற்றுச்சுவர் கட்டியிருப்பதாக பாலூர் பகுதியை சேர்ந்த வினோத் பாபு என்பவர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தார். இதன் அடிப்படையில் ஊராட்சி நிர்வாகம் ஆய்வு செய்ததில் குளத்தின் கரையை ஆக்ரமித்து வீட்டின் ஒரு பகுதியும், சுற்றுச்சுவரும் கட்டியிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து அந்த நபருக்கு ஆக்ரமிப்பு அகற்ற ஊராட்சி சார்பில் நோட்டிஸ்  அனுப்பப்பட்டது. பதிவு தபாலில் ஊராட்சி நிர்வாகம் அளித்த நோட்டீசை வாங்க அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.      இந்நிலையில் நேற்று முள்ளங்கினாவிளை ஊராட்சி தலைவி பிரபா, கிள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அமராவதி மற்றும் அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் ஆக்ரமிப்பை அகற்றினர். கருங்கல் எஸ்ஐ மகேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News