உயர்கோபுர மின் விளக்குகள் சீரமைப்பு

உயர்கோபுர மின் விளக்குகளை மாற்றி, சீரமைக்கப்பட்டது.

Update: 2024-06-28 15:14 GMT
உயர்கோபுர மின் விளக்குகளை மாற்றி, சீரமைப்பு

மாமல்லபுரம் முக்கிய சுற்றுலா பகுதி. இங்குள்ள சிற்பங்களைக் காண வரும் சுற்றுலா பயணியரின்எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. பயணியர் ஊர் திரும்பவும், உள்ளூர் பயணியர் வெளியூர் செல்லவும், தினசரி மாமல்லபுரம் பேருந்து நிலையத்தில், இரவு வரை நுாற்றுக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.

இப்பகுதி, ஸ்தலசயன பெருமாள் கோவில் முகப்பு நுழைவாயில் என்பதால், இவ்வழியில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நடமாட்டமும் உள்ளது. இத்தகைய பகுதியில், பல மாதங்களாக மின் விளக்குகள் பழுதடைந்து, இருளில் மூழ்கியிருந்தது. பயணியர் உள்ளிட்டோர் அவதிக்குள்ளானது குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் விளைவாக, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பேருந்து நிலையத்தில் பழுதாகியிருந்த உயர்கோபுர மின் விளக்குகளை மாற்றி, சீரமைக்கப்பட்டது.

Tags:    

Similar News