குடியரசு தினவிழா கொண்டாட்டம்

குடியரசு தின விழாவை முன்னிட்டு சேலம் மாநகர காங்., சார்பில் கட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

Update: 2024-01-26 16:09 GMT

குடியரசு தின விழாவை முன்னிட்டு சேலம் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதனைத் தொடர்ந்து சேலம் கோட்டை 31 வது டிவிசன் பகுதியில் மாநகர துணைத்தலைவர் சேக் இமாம் தலைமையில் மாநகர மாவட்டச் செயலாளர் ஏ.பி.பாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 32 வது கோட்டப்பகுதி முகமதுபுறாவில் மாநிலத் துணைச்செயலாளர் நிஜாம் தலைமையில் மாநகர் மாவட்ட செயலாலர் ஏ.பி.பாஸ்கர் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார். இந்த குடியரசு தின விழா நிகழ்வில் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் எம்டி சுப்பிரமணியம், மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பச்சப்பட்டி பழனி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News