குமரியில் குடியரசு தின விழா - கொடியேற்றிய ஆட்சியர்

நாகர்கோவிலில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தேசிய கொடியை ஏற்றி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2024-01-26 06:53 GMT
போலீஸ் அணிவகுப்பு மரியாதை

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா இன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது . காலை 8 .05 மணிக்கு கலெக்டர் ஸ்ரீதர் தேசிய கொடி ஏற்றினார். இதையடுத்து மூவர்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன. தொடர்ந்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திறந்த வாகனத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனத்துடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 87 பேருக்கு விருதுகள் மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 7 லட்சம் மதிப்பில் நல உதவிகளும் வழங்கப்பட்டன. மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றன.

Tags:    

Similar News