ராசிபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

ராசிபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டப்பட்டது.

Update: 2024-01-27 06:12 GMT

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அண்ணா சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் நாட்டின் 75 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக வர்ணம் பூசிய கொடிக்கம்பங்களுக்கு புதிய தேசியக்கொடி ஏற்றி அனைவரும் மரியாதை செலுத்தினர் ‌. இதனைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன், தலைமையுரை ஆற்றினார். வரவேற்புறை ஆற்றிய க.சேகர், தொகுப்புரை கே. கண்ணன், இதைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்டத்தைத் பற்றி பள்ளி குழந்தைகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில் முன்னாள் மாணவர் தலைமை மருந்தாளுநர், ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் அ.ராஜு, மற்றும் வார்டு கவுன்சிலர்கள் விநாயக மூர்த்தி, கலைமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினர். நன்றியுரை நிகழ்த்தினர். ஆசிரியர் பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News