ஆரம்ப பள்ளியில் 75 ஆவது குடியரசு தின விழா

செங்கல்பட்டு மாவட்டம், ஈசூர் ஆரம்ப பள்ளியில் குடியரசுதின விழா வெகுவிமர்ச்சையாக நடைபெற்றது.

Update: 2024-01-28 12:21 GMT
ஆரம்ப பள்ளியில் 75 ஆவது குடியரசு தின விழா

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே உள்ள ஈசூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் 75 ஆவது குடியரசு தின விழா வெகு விமர்சையாக பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் இந்தியா குடியரசு எவ்வாறு பெற்றதை விளக்கு வகையில் பேச்சுப் போட்டி, கவிதைப்போட்டி, நாடகம் மற்றும் நடனம் மூலம் தெளிவாக எடுத்துரைத்தினர்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் படாளம் சத்யசாய், பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி கலைச்செல்வி, கிளைக் கழக செயலாளர்கள் லோகநாதன், ஜெயப்பிரகாஷ், ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் சிவனேசன், குணசுந்தரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News