சர்வம் அறக்கட்டளை சார்பில் குடியரசு தின விழா

நாமக்கல் சர்வம் அறக்கடைளை சார்பில் நடைபெற்ற குடியரசுதினவிழாவில் மாணவர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-01-27 12:08 GMT

குடியரசுதின விழா

நாமக்கல் சர்வம் அறக்கட்டளை கொண்டாடி மகிழ்ந்த 75வது குடியரசு தின விழா நாமக்கல் சர்வம் அறக்கட்டளை சார்பில் இந்திய தேசத்தின் 75வது குடியரசு தின விழா சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அறக்கட்டளை மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் தலைமையில் ,தலைமையாசிரியர் பார்த்திபன் முன்னிலையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் எழுது பொருள்கள் இனிப்பு மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கினார். மேலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சர்வம் அறக்கட்டளையின் சார்பில் பரிசும் பாராட்டும் சான்றிதழ்களை அதன் நிர்வாகிகள் வழங்கினார்கள்.இந்த நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News