பள்ளப்பட்டி நகராட்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

பள்ளப்பட்டி நகராட்சியில் காந்தியடிகள் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து குடியரசு தின விழா நடைபெற்றது.

Update: 2024-01-26 16:42 GMT

குடியரசு தின விழா கொண்டாட்டம்

பள்ளப்பட்டி நகராட்சியில் காந்தியடிகள் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து குடியரசு தின விழா கொண்டாட்டம். நாட்டின் 75 வது குடியரசு தின விழாவை இன்று நாடே கொண்டாடி வருகிறது.

இதன் அடிப்படையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பள்ளப்பட்டி நகராட்சியில், காந்தியடிகள் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து குடியரசு தின விழாவை கொண்டாடினர்.

பள்ளப்பட்டி நகராட்சி தலைவர், முனைவர் ஜான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகராட்சி உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், மற்றும் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு குடியரசு தின விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினார்.

அப்போது தேச ஒற்றுமையை வலியுறுத்தி அவர்கள் உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

Similar News