திருச்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு விமான நிலைய இயக்குனர் பல போட்டிகள் நடத்தி பரிசுகளை வழங்கி கௌரவித்தார்

Update: 2024-01-26 09:57 GMT

திருச்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

நாட்டின் 75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் துப்பாக்கிகளை கையாளும் நிகழ்ச்சி மற்றும் மோப்ப நாய்களின் நுண்ணறிவு திறன் மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன பின்னர் குடியரசு தினத்தை முன்னிட்டு நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற விமான நிலைய ஊழியர்களுக்கு விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வில் விமான நிலைய அதிகாரிகள் விமான நிலைய தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் விமான நிலைய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News