தார்சாலை அமைக்கும் கலவை ஆலை இடமாற்ற கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள தார் சாலை அமைக்கும் கலவை ஆலையை இடம் மாற்ற பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Update: 2024-01-24 02:00 GMT

தார்சாலை அமைக்கும் கலவை ஆலை இடமாற்ற கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட முகமது பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அப்பகுதியினர் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜனவரி 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில், தங்களது கிராமத்தில் தார் சாலை அமைக்கும் கலவை ஆலை இயங்கி வருகிறது. அதன் இயக்கத்தின் போது ஆலையில் இருந்து வரும் நச்சுப் புகை அதிக அளவில் வெளியிடப்படுகிறது,

இதனால் இப்பகுதியில் உள்ள, சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு பாதிப்பு ஏற்படுகிறது .மேலும் காற்று மாசு அடைந்துள்ளது, இதுகுறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து எந்த நடவடிக்கையும் இல்லாததால், தற்பொழுது மீண்டும், மாவட்ட ஆட்சியரிடம் அந்த தார் சாலை அமைக்கும் கலவை ஆலையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து மனு அளித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News