விராலிமலையில் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை!

விராலிமலையில் மின்கம்பிகளுக்கு இடையே வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-01 02:41 GMT

விராலிமலையில் மின்கம்பிகளுக்கு இடையே வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


விராலிமலையில் மின்கம்பிகளுக்கு இடையே வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். விராலிமலை-இனாம் குளத்தூர் செல்லும் சாலையில் உள்ள காமராஜர் நகர், ரத்னா கார்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு விராலிமலை துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இனாம்குளத்து சாலையில் காமராஜர் நகர் அருகேமின் கம்பங்களுக்கு இடையே கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது.இதனால் காற்றின் வேகத்தால் கருவேல மரங்கள் மின் கம்பியில் உரசி மின் விநியோகத்தை தடைசெய்கிறது. ஆகவே, மின்கம்பிகளுக்கு இடையே உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News