ஆடி அமாவாசைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

மானாமதுரை வழியாக மண்டபத்திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-14 15:08 GMT

மானாமதுரை வழியாக மண்டபத்திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மானாமதுரை வழியாக மண்டபத்திற்கு ஆடி அமாவாசையை யொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டுமென பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஹிந்துக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆடி அமாவாசைக்கு ராமேஸ்வரத்திற்கு செல்வது வழக்கம். தமிழகம் மட்டுமில்லாது பல பகுதிகளில் இருந்தும் ராமேஸ்வரம் செல்வது வழக்கம்.

வரும் ஆக.4ம் தேதி ஆடி அமாவாசை வர இருப்பதால் தற்போது ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பணிகள் நடைபெற்று வருவதால் மண்டபம் ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயில்களை சென்னை, திருச்சி, கோவை, பாலக்காடு, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இயக்க வேண்டுமென்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News