விடுமுறை நாட்களில் பணி செய்வதை தடுக்க கோரிக்கை

திண்டுக்கல் அருகே விடுமுறை நாட்களிலும் செயல்படும் பள்ளியால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

Update: 2024-05-01 09:53 GMT

திண்டுக்கல் அருகே விடுமுறை நாட்களிலும் செயல்படும் பள்ளியால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.


ஒட்டன்சத்திரம் அரசு விடுமுறையிலும் இயங்கும் பள்ளிக்கூடம் இன்று தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை அளித்துள்ளது. இருந்தபோதிலும் ஒட்டன்சத்திரத்தில் இயங்கி வரும் ஸ்ரீ கிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி எந்த அரசு விடுமுறையையும் பின்பற்றுவதில்லை. இன்று தொழிலாளர்கள் தின விடுமுறை உள்ள போதிலும் அங்கு பணி புரியும் சுமார் 70 ஆசிரியர் ஆசிரியைகளை பணிக்கு வரச் சொல்லி பணி செய்து வருகின்றனர் . எனவே பள்ளி கல்வித்துறையும் மாவட்ட நிர்வாகமும் உடன் நடவடிக்கை எடுத்து விடுமுறை நாட்களில் பணி செய்வதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாவட்ட தலைவர் எம் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News